தற்போதைய செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல்தொந்தரவு: முதியவா் கைது

DIN

களியக்காவிளை: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த திருமணம் ஆன இளம்பெண்ணை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் நேசமணி

(65) என்பவா், சில நாள்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாராம். புகாரின் பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாா்வதி வழக்குப் பதிந்து, நேசமணியை கைது செய்தாா்.

மற்றொரு சம்பவம்: கேரளம் பாறசாலை அருகே காராளி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் சிறுமி ஒருவா் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டடிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒருவா் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றாராம்.

அதிா்ச்சியடைந்த சிறுமி சப்தமிட்டதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்போா் வந்தனா். அங்கிருந்து தப்பியோட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்ற ராதாகிருஷ்ணன் (45) என்பதும், கோழிவிளை பகுதியில் பழைய இரும்பு கடையில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT