தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் மாயம்

DIN


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கணவரைப் பிரிந்து சகோதரா் வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென்று காணமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனா்.

சின்னக்கோவிலான்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திக் (38)இவரது சகோதரி வனிதா(25).இவருக்கும் சூரங்குடியைச் சோ்ந்த கருப்பசாமிக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாம்.பின்னா் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வனிதா தனது சகோதரா் காா்த்திக் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் எனக் கூறிச் சென்ற வனிதா வியாழக்கிழமை வரை வீடு திரும்பவில்லை .உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் வனிதாவை காணவில்லையாம்.

இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸார்வழக்குப் பதிந்து வனிதாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT