தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வா், துணை முதல்வர் மரியாதை!

முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று

DIN


முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இடைத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களும் மரியாதை செலுத்தினர். 

விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத் தோ்தலில் ஆளும் அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு வெற்றியாளா்களும் எம்.எல்.ஏ.,க்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனா்.

இந்நிலையில், பதவியேற்புக்கு முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளா்களுடன் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் (நவ.1) ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இடைத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களும் மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT