தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்க சென்றபோது கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு

DIN


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பிரபு என்ற இளைஞர் சாதிப் பெயரை சொல்லி திட்டிய வழக்கில் அவரை நரிக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரை சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்து வந்தனர். 

இந்நிலையில், அதிகாலை சுமார் 3 மணி அளவில்  ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறையை நெருங்கியபோது பிரபு தப்பி ஓடி விட்டார். பின்னர் பிரபுவை காவல் துறையினர் துரத்தி சென்றவர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஓடிய பின் பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் பிடித்தனர். 

இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து பிரபுவிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

அதிகாலையில் கைது தப்பியோடிய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைக்க கொண்டு வந்த நிலையில் மூன்று பேரையும் ஏமாற்றி விட்டு ஓடியது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT