தற்போதைய செய்திகள்

சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் இறந்த சம்பவம்: திருவாரூரில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


திருவாரூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணையின்போது தந்தை, மகன் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து  திருவாரூரில்  விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையின் விசாரணையின்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்தை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வர்த்தக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக
முழக்கங்களை எழுப்பினர்.

இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும், பென்னிக்ஸின் 3 சகோதரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் வர்த்தக சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT