தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

DIN

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்,  சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த உறவினர் ஒருவரை கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றவர்கள் குறித்து கானை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம் அருகே உள்ள கருங்காலி பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலாஜி(50). இவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் மாடியில் உறவினர் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கதவின் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று 30 பவுன் நகைகள், எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். 

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த உறவினர் ஒருவரை, கம்பியால் தாக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றுள்ளது. 

 இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT