தலித் இளைஞர் மீது அமிலம் வீசியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 1996 ஆம் ஆண்டு தலித் இளைஞர் மீது அமிலம் வீசிய குற்றவாளிக்கு வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 1996 ஆம் ஆண்டு தலித் இளைஞர் மீது அமிலம் வீசிய குற்றவாளிக்கு வியாழக்கிழமை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் விசாராணையில் இருந்த இந்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 326, 504 மற்றும் 506 பிரிவுகள் மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் பிரிவு 3 ன் கீழ் குற்றவாளி ராம்பலை குற்றவாளி என இன்று நீதிபதி ஹிமான்ஷு பட்நகர் தீர்ப்பளித்தார்.
மேலும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 57 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ஷாம்லி மாவட்டத்தின் காந்த்லா நகரத்திற்கு அருகே அப்போதைய 15 வயது பிட்டு என்ற சிறுவன் மீது அமிலம் வீசியதற்காக ராம்பால் மற்றும் ஃபாரூக் ஆகிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், விசாரணை தொடங்கியதிலிருந்து மற்றொரு குற்றவாளி ஃபாரூக் தலைமறைவாக உள்ளார் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.