ஆப்கனில் 11 தலிபான்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
காஸ்னி மாகாணத்தின் நோகா மற்றும் வாகாஸ் மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அந்தத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினர், வாகாஸில் எட்டு தலிபான்களையும், நோகாவில் மேலும் மூன்று தலிபான்களையும் சுட்டுக் கொன்றனர்.
மேலும், அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.