சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து, கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இரண்டு சம்பவங்களில் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,
Advertisement
Advertisement
துபை செல்லும் பயணிகளை சோதனை செய்ததில், 3 பேரிடம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 21.39 லட்சம் ஆகும்.
மற்றொரு சம்பவத்தில், துபையிலிருந்து வந்த பயணியை சோதனையிட்டதில், ரூ. 11.25 லட்சம் மதிப்பிலான 220 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.