தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பிற்பகல் 7 மணியளவில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் மக்கள் தொகை தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.