முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே முருகன் ஆலயத்தில் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

Updated On : 14 ஜனவரி 2021, 3:26 pm IST
பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்
பகிர்:

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே முருகன் ஆலயத்தில் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் சென்ற அவர் அங்கிருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வருகை புரிந்தார்.

அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

Advertisement

Advertisement

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புடன், பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு மக்களை சந்தித்து உரையாடவும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments