முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் போலி கிருமிநாசினி: 82 நிறுவனங்களிடம் விசாரணை

தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி கிருமிநாசினி தயாரித்து விற்ற 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது.

Updated On : 15 ஏப்ரல், 2021 at 2:12 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி கிருமிநாசினி தயாரித்து விற்ற 82 நிறுவனங்களிடம் மருந்து கட்டுப்பாடு இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கரோனா வராமல் தவிர்க்க கிருமிநாசினி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், தரமற்ற மற்றும் போலியான கிருமிநாசினிகளை தயாரித்து சந்தைகளில் விற்றதாக 82 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்ககம் சார்பில் முதல்கட்டமாக 32 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், 82 நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.