மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை(ஏப்.17) ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ANI

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியது,

கரோனா பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளேன். மேலும், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் நிர்வாகத்துடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளேன்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் கடைசி 7 நாள்களிலும், 44 மாவட்டங்களில் 28 நாள்களில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

கரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களிடம் உற்பத்தியை அதிகரிக்கும்படி கூறியுள்ளோம். மருந்துகளை அனுமதி இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT