ஜம்மு-காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலுள்ள தங்தார் செக்டர் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் 6வது ரைபிள்ஸ் நிறுவனத்தின் மேஜராக ஃபயாசுல்லா கான் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.