ஒசூரில் கரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் பணி தொடங்கியது
ஒசூரில் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.
ஒசூரில் அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.
ஒசூர், அந்திவாடி, டிவிஎஸ் நகர், ஏரி தெரு, பாகலூர், கக்கனூர், பேரிகை ஆகிய. நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஏ. சத்யா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் எல்லோரா. மணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.