சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பாமக வேட்பாளர்கள் பழனி, பாலசுந்தரம், குமரேசன், தனபால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் சாமுண்டீஸ்வரி, செல்வி ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 6-வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.