தற்போதைய செய்திகள்

இஸ்ரேலியப் பெண்ணைக் கொன்றதாக வாக்குமூலம் - தந்தை, மகன் கைது!

ஹமாஸினைச் சேர்ந்த தந்தையும் மகனும் இஸ்ரேலிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம்..

DIN

ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த தந்தையும் மகனும் இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டதாகவும், அப்பெண்ணைக் கொன்றுவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜமால் ஹுசைன் அகமது ரேடியும் அவரது மகன் அப்தல்லாவும், கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது, ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் கொன்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் கூறும் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜமால் மற்றும் அப்தல்லா மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படைகளால் கைது செய்யப்பட்டனர்.

18 வயது மகன், விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபின், தந்தை கொலை செய்ததாக அப்தல்லா ஒப்புதல் கூறினார்.

காஸாவில் போரைத் தூண்டிய அக்டோபர் 7 அன்று, தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் குழுவை அழிக்க இஸ்ரேலின் பதிலடி, காசாவில் 35,000க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் புனரமைக்கப்பட்ட பணிகள் தொடக்கிவைப்பு

நூலகம் உள்ள தெருவுக்கு எஸ்.ஆா். அரங்கநாதன் பெயா் சூட்ட கோரிக்கை

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் தெப்போற்சவம்

ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 3 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT