முகப்பு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலியப் பெண்ணைக் கொன்றதாக வாக்குமூலம் - தந்தை, மகன் கைது!

ஹமாஸினைச் சேர்ந்த தந்தையும் மகனும் இஸ்ரேலிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம்..

Updated On : 24 மே 2024, 6:22 pm IST
பகிர்:

ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த தந்தையும் மகனும் இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டதாகவும், அப்பெண்ணைக் கொன்றுவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜமால் ஹுசைன் அகமது ரேடியும் அவரது மகன் அப்தல்லாவும், கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது, ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் கொன்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் கூறும் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜமால் மற்றும் அப்தல்லா மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படைகளால் கைது செய்யப்பட்டனர்.

18 வயது மகன், விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபின், தந்தை கொலை செய்ததாக அப்தல்லா ஒப்புதல் கூறினார்.

Advertisement

Advertisement

காஸாவில் போரைத் தூண்டிய அக்டோபர் 7 அன்று, தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் குழுவை அழிக்க இஸ்ரேலின் பதிலடி, காசாவில் 35,000க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments