தற்போதைய செய்திகள்

சாம்ஸங் இந்த வாரம் அறிமுகப்படுத்துகிறது 5ஜி டேப்லெட்!

DIN

சியோல்: சாம்ஸங் நிறுவனம் விரைவில் 5ஜி டேப்லெட் ஒன்றைத் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

கேலக்ஸி டேப் எஸ்6 5 ஜி என்ற இந்த டேப்லெட்தான் உலகின் முதலாவது 5ஜி டேப்லெட் என்ற பெருமையைப் பெறவுள்ளது.

தென் கொரியாவில் இதன் விலை 850 டாலராக (சுமார் ரூ. 61 ஆயிரம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவுக்கு வெளியே இந்த டேப்லெட் எப்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பதை இன்னமும் சாம்ஸங் நிறுவனம் அறிவிக்கவில்லை.

இதன் எடை 420 கிராம். தென் கொரியாவில் விற்பனைக்கு வரும் டேப்லெட் சாம்பல் நிறத்தில், 128 கிகாபைட்ஸ் சேமிப்புத் திறன் கொண்டதாக இருக்கும்.

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உலகச் சந்தையில் குறிப்பிடும்படியான இடத்தைக் கைப்பற்ற சாம்ஸங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT