பாம்பினை பிடிக்கும் அந்தியூர் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர். 
தற்போதைய செய்திகள்

அந்தியூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளத்தில் விடுவிப்பு

அந்தியூர் அருகே வெவ்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டது.

DIN

பவானி: அந்தியூர் அருகே வெவ்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட பாம்புகள் வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டது.

அந்தியூரை அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் மனைவி வெங்கட்டம்மாள். இவரது வீட்டுக்கு அருகாமையில் பாம்பு மறைந்திருப்பதாக அந்தியூர் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வேட்டைதடுப்புக் காவலர்கள் தர்மலிங்கம், ஆனந்த் ஆகியோர் விரைந்து சென்றனர். அங்கு, புதருக்குள் மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பினைப் பாதுகாப்புடன் பிடித்தனர்.

இதனையடுத்து அந்தியூர் புதுப்பாளையம், வெள்ளைப்பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த  மணிகண்டன், தனது வீட்டில் வளர்க்கும் கோழிக்காக அமைத்திருந்த கூண்டில் பாம்பு புகுந்திருப்பதைக் கண்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த இருவரும் கோழிக் கூண்டில் பதுங்கியிருந்த நாகப்பாம்பினை உயிருடன் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, இரு பாம்புகளும் அந்தியூரை அடுத்த வறட்டுப்பள்ளம் அணை பகுதியில் பாதுகாப்புடன் விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

இருமல் மருந்து விவகாரம்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? உலக சுகாதார அமைப்பு கேள்வி

பாக். பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி! கைபர் முதல்வர் பதவி நீக்கம்!

உங்கள் தொண்டு எங்களுக்கு தேவையில்லை! மத்திய அரசுக்கு கேரள நீதிமன்றம் கடும் தாக்கு!

SCROLL FOR NEXT