தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக்கொலை

DIN

தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகிலுள்ள எம். தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (43). இவரது இரண்டாவது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக தம்பதியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் வீட்டில் இருந்த சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சுப்பையாவின் மனைவி தமிழ்ச்செல்வியின் சகோதரர் சதீஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT