கோவையில் குனியமுத்தூர் சாலை ஆத்துப்பாலம் பகுதியில் மது போதையில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இருவர் காயமுற்றனர்.
சுமார் 40 நாள்களுக்குப் பிறகு இன்று சென்னை தவிர்த்துத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கோவையில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று இரு இளைஞர்கள், மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.