காலமானார்: கே. சுப்பிரமணியம்
'தினமணி' நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் கே. சுப்ரமணியம் (வயது 68) உடல்நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
'தினமணி' நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் கே. சுப்ரமணியம் (வயது 68) உடல்நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
பத்திரிகை துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுப்பிரமணியம். சென்னை நிருபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மறைந்த சுப்பிரமணியத்துக்கு மனைவி அருள்மொழி, இரு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.