தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தை 'தலைவா' எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, ''பல தலைமுறைகளாக பிரபலமானவர், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அன்பான ஆளுமை கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த்.
'தலைவா' ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.