சென்னை: ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், மக்கள் மத்தியில் நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றிபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா கேவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தெரிவித்துள்ளார்.