முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹஜ் பயணம்: ஜிஎஸ்டி, வருமான வரி விலக்களிக்க திருமாவளவன் எம்பி வலியுறுத்தல்

ஹஜ் பயணத்திற்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 டிசம்பர் 2021, 9:43 pm IST
ஹஜ் பயணம்: ஜிஎஸ்டி, வருமான வரி விலக்களிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
பகிர்:

ஹஜ் பயணத்திற்கு ஆகும் செலவுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 21-இல் இருந்து 10-ஆக மத்திய அரசு குறைத்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஹஜ் புனித பயணத்திற்கு ஆகும் செலவிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஹஜ் பயணிகள் மீண்டும் சென்னை விமானத்திலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு 4000 முதல் 4500 பேர் வரை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ஹஜ் பயணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள கொச்சின் விமான நிலையம் சென்னையிலிருந்து 700 கி.மீ.க்கு அப்பால் உள்ளது மிகுந்த சிரமத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு இதுதொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments