தற்போதைய செய்திகள்

சசிகலாவிற்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை

DIN

பெங்களூருவில் சிறையிலுள்ள சசிகலா, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சர்க்கரை, தைராய்டு, காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனை அழைத்துவரப்பட்ட சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அவர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT