தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஸ்ரீநகர்:  ஸ்ரீநகரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஆலம்தார் காலனி, தன்மார் பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இரண்டு போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT