துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிப்பு 
தற்போதைய செய்திகள்

துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிப்பு

துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

துறையூர்: துறையூர் அரசு மருத்துவமனைக்கு 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஏசிடி கிராண்ட்ஸ், ஸ்வாஸ்த் ஆகிய அமைப்புகளின் நிதியுதவியுடன் ரோட்டரி இந்தியா, சென்னை வடக்கு ரோட்டரி சங்கம், யுனைடைட் வே பெங்களூரு ஆகியன இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் துறையூர் ரோட்டரி சங்கம் வழியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துறையூர் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமார் தலைமை வகித்தார். துறையூர் ரோட்டரி சங்க தலைவர் என். கணேசமூர்த்தி, திட்ட தலைவர் ஏ. சரவணன், திட்ட செயலர் ஜி. முரளி, மண்டல ஒருங்கிணைப்பாளர் பி. பாலசுப்பிரமணியன், ரோட்டரி மாவட்டம்-3000 உதவி ஆளுநர் ஏ. நாகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துறையூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பி. வேல்முருகனிடம் (குழந்தைகள் நலம்) ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 5 வழங்கப்பட்டது.

இதில் துறையூர் நகர திமுக செயலர் மெடிக்கல் ந.முரளி உள்ளிட்ட திமுகவினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT