தற்போதைய செய்திகள்

நாகை அரசு மருத்துவமனையின் ஆக்சிஜனை நிறுத்தியதால் நோயாளி உயிரிழப்பு?

DIN

நாகை அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த வங்கி ஊழியருக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் வங்கி ஊழியர் ராஜேஷ். இவருக்கு தொற்று பாதிப்பு அதிகமானதால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 15க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

இதனிடையே அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்ட போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் துண்டிப்பட்டதாகவும், கரோனா தொற்று தீவீரமடைந்ததால் தான் ராஜேஷ் உயிரிழந்தார், ஆக்சிஜன் நிறுத்தம் காரணமல்ல. மற்ற நோயாளிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT