தற்போதைய செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN


சென்னை: பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசி வருகிறார். 

கடந்த இரண்டு தினங்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் ஆளுநர் உரையில் பங்கேற்று, அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன் என்று கூறிய முதல்வர், நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி ஸ்டாலின்.  அண்ணாவின் அரசியல் வாரிசு, கருணாநிதியின் கொள்கை வாரிசு ஸ்டாலின். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி 

பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.

5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை ஆளுநர் உரையில் சொல்லி விட முடியாது; ஆளுநர் உரை முன்னோட்டம் தான். 

நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது தமிழகத்தில் தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்கள் மீது போது போட்டப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT