பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ம் தேதியுடன் பான் - ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசத்தை நீட்டித்து வருவான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பான் - ஆதார் எண் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.