தற்போதைய செய்திகள்

‘லட்சத்தீவில் நிம்மதி திரும்ப வேண்டும்’: மநீம கமல்ஹாசன் அறிக்கை

DIN

லட்சத்தீவுகளில் நிம்மதி திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் நிறைவேற்றி வரும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதால் அமைதியற்ற சூழல் நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT