சென்னையில் பரவலாக கனமழை!
சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக காற்றுடன் கனமழை பெய்து வருகின்றன.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக காற்றுடன் கனமழை பெய்து வருகின்றன.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஆக.7-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை வெப்பமான சூழல் நிலவி வந்த நிலையில் திடீரென வானிலை மாறி சுறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, அம்பத்தூா், அண்ணா நகர், கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களில் பரவலாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, புளியந்தோப்பு, பட்டாளம் ஓட்டேரி, பெரம்பூர் வியாசர்பாடி ,திரு.வி.க நகர்,கொளத்தூர், ரெட்டேரி ,மாதவரம் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை சீரமைக்கப்படாததால் அங்கங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், சாலைகளில் மழைநீா்த் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.