வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் 
தற்போதைய செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு சங்கு வளையல் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

DIN

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது.

இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த அகழ்வாராய்ச்சியில், கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது.

இதன்மூலம் சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றம் செய்யும் கூடம் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1600 தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"விடுதிகளுக்கு AC வசதி!" விளையாட்டு வீரரின் வேண்டுகோளுக்கு துணை முதல்வர் தந்த பதில்!

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

ஏஐ பயன்பாடு : பூடான் பிரதமரை சந்தித்துப் பேசிய மோடி!

”அம்மா வேண்டாம்! அக்கா போதும்!” தொண்டர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT