தற்போதைய செய்திகள்

விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும்: அண்ணாமலை

விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

விரைவில் திமுக ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி:

சட்டமன்றத் தேர்தல் நெருங்கின்ற வேளையில், திமுக ஃபைல்ஸ் 3 ஆம் பாகம் வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை, கலைஞர் கைவினை திட்டம் என பெயரிட்டு தமிழக அரசு அமல்படுத்துகிறது. இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம்தான் நிதி கேட்டு வருவார்கள், கிடைக்கவிட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று வசனம் பேசுவார்கள்.

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம்.

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்னைக்காக அவர் பதவி விலக வேண்டும்.

விருதுநகரில் எஸ்ஐ மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தமிழகம் முழுவதும் போலீஸார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளததை எடுத்துக்காட்டுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம், பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.

எனவே, இலங்கையிலும், இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.

கடந்த மூன்றுமாத காலமாக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பணியாற்றியுள்ளனர். இதனால் பாஜக எழுச்சி கண்டுள்ளது என்றார்.

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெவ்வெறு சம்பவங்கள்: சிறுமி உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

நன்றென்றதெல்லாம் தீதென்பாா்!

சமூக வலைதள விமா்சனங்களை பொருள்படுத்த வேண்டியதில்லை: நீதிபதி

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த முயற்சி: கிராம மக்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 396 மனுக்கள்

SCROLL FOR NEXT