தற்போதைய செய்திகள்

இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கை

DIN

சென்னை: நான்கு நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமவேலை சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் 4 நாள்களுக்கு மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் போராட்டத்தில் அவா்கள் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நிதிநிலை சீராகும்போது, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. அவா்களின் நியாயமான கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வாசன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சீரற்ற சாலைகள், முறையற்ற குடிநீர் விநியோகம்!” மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

பராசக்தி படத்தின் உரிமத்தைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!

பாகிஸ்தானில் போலியோ பணியில் ஈடுபட்ட காவலர் மீது துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

காதலியுடன் நேரம் செலவிட விடுப்பு கேட்ட ஊழியர்! மேலதிகாரியின் பதில் என்ன தெரியுமா?

ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

SCROLL FOR NEXT