மேட்டூர் அணை: வினாடிக்கு நீர்வரத்து 4521 கன அடி!
மேட்டூர் அணை நீர் வரத்து 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4521 கன அடியாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.59 அடியிலிருந்து 41.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,341 கன அடியிலிருந்து 452 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக இருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.