முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து 2369 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

Updated On : 1 ஜூன் 2026, 9:09 am IST
மேட்டூர் அணை நீர்வரத்து 2,369 கன அடியாக அதிகரித்துள்ளது - கோப்புப்படம்
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து 2,369 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,951 கன அடியிலிருந்து 2,369 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Advertisement

Advertisement

அணையின் நீர்மட்டம் 79.16 அடியிலிருந்து 79.26 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 41.22 டிஎம்சியாக உள்ளது . மழை அளவு 40 மி.மீ

summary

Due to rainfall in the Cauvery's catchment areas, the inflow into the Mettur Dam has increased to 2,369 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.