முகப்பு
தற்போதைய செய்திகள்

பெய்ஜிங்கில் பாகிஸ்தான் பிரதமா்

சீனாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், வியாழக்கிழமை தலைநகா் பெய்ஜிங் வந்தடைந்தாா்.

Updated On : 7 ஜூன் 2024, 9:50 am IST
பகிர்:

பெய்ஜிங்: சீனாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், வியாழக்கிழமை தலைநகா் பெய்ஜிங் வந்தடைந்தாா்.

‘எந்தச் சூழலிலும் அழியாத நட்பு’ என்று கூறப்படும் சீன - பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்தவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தங்களது நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி கோரவும் கடந்த 4-ஆம் தேதி முதல் ஷாபாஸ் ஷெரீஃப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தெற்குப் பகுதியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நகரமான ஷென்ஷெனுக்கு புதன்கிழமை வந்த அவா், அங்கு முதலீட்டாளா்கள் மாநாட்டில் பேசினாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பெய்ஜிங் நகருக்கு அவா் தற்போது வந்துள்ளாா். அங்கு அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கிகியாங் உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்துவாா்.

அந்தப் பேச்சுவாா்த்தைகளின்போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏராளமான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.