அறுவை சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ. 
தற்போதைய செய்திகள்

நான் நலமுடன் இருக்கிறேன்: உடல்நிலை குறித்து வைகோ பதிவு

நான் நலமாக இருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடியோ வெளியிட்டுள்ளார் .

DIN

நான் நலமாக இருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் .

மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு வைகோ சென்றாா். பின்னா், நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரா் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்த அவா், சனிக்கிழமை இரவு நிலை தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதில், அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வைகோ, அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தாா்.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவக் குழுவினா் அவரது உடல் நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், சில பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், புதன்கிழமை வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்தபடியே விடியோ பதிவு ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார் வைகோ.

அந்த விடியோ பதிவில், நான் ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாள்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாத சாய்ந்து விட்டேன்.

இதில் தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்க சென்னைக்கு போக வேண்டும். அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை( மே 29) அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நான் முன்பு போல் இயங்க முடியுமா என யாரும் சந்தேகப்பட வேண்டாம். தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய குணமடைந்து வருவேன். எனக்காக வருந்தும் உள்ளங்களுக்கு நன்றி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT