விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்துவைக்கும் முதல்வர் ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்!

விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர்.

DIN

விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று(நவ. 10) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

விருதுநகரில் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் வந்தடைந்தார்.

நேற்று முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டார்.

இந்த நிலையில், இன்று விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களை பார்வையிட்டார்.

மேலும், வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT