அமானத்துல்லா கான் படம்: எக்ஸ்
தற்போதைய செய்திகள்

தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள அமானத்துல்லா கான் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தில்லி வக்ஃப் வாரியத் தலைவராக அமானத்துல்லா கான் இருந்தபோது, பணி நியமனத்திற்காகப் பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

முன்னதாக அமானத்துல்லா கான் வெளியிட்ட விடியோவில், "தன்னை கைதுசெய்து துன்புறுத்துவதே அமலாக்கத்துறை அதிகாரிகள் நோக்கம். சர்வாதிகாரியின் கட்டளையின் பேரில் என்னை கைது செய்ய வந்துவிட்டனர்” என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், அவர் தான் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் தனக்கான வழங்கும் என்றும் அமானத்துல்லா கான் தெரிவித்து இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT