முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் உணவுக்கூடம் கட்ட பூமி பூஜை

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளர்கள் நிதி ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்கள் உணவுக் கூடம்

Updated On : 4 ஏப்ரல் 2025, 12:11 pm IST
ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளர்கள் நிதி ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்கள் உணவுக் கூடம் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை.
பகிர்:

ஆம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நன்கொடையாளர்கள் நிதி ரூ.1 கோடி மதிப்பில் பக்தர்கள் உணவுக் கூடம், நிர்வாக அலுவலர் அலுவலகம், அர்ச்சகர் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் நகர் மன்ற துணைத் தலைவர் எம். ஆர். ஆறுமுகம், திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சாய் கே. வெங்கடேசன்,கோயில் செயல் அலுவலர் வினோத்குமார்,கோயில் அறங்காவலர் குழு தலைவர் கீதா, அறங்காவலர் குழு உறுப்பினர் ரமேஷ், நாகநாத சுவாமி அறங்காவலர் குழுத் தலைவர் கைலாஷ் குமார், முக்கிய பிரமுகர்கள் சேகர் ரெட்டியார் ஜெயவேல் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.