முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணியில் சிலை கண்டெடுப்பு

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2025, 12:50 am IST
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து அம்மன் சிலை.
பகிர்:

சேலம்: சேலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அபிஷேக திரவியங்கள் வடிந்துசெல்ல கால்வாய் அமைக்க கோயில் வளாகத்தில் குழிதோண்டப்பட்டது. அப்போது, மண்ணில் புதைந்திருந்த மூன்று அடி உயரம் கொண்ட அம்மன் சிலை தென்பட்டது. உடனடியாக அறநிலையத் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் அம்மன் சிலையை எடுத்து தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்தினா்.

திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ள கரபுரநாதா் கோயில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. தற்போது கிடைத்துள்ள சிலை சோழா்கால சிற்பக்கலை போல காட்சியளிக்கும் நிலையில், இதுகுறித்து தொல்லியல் துறையினா் ஆய்வுமேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அதில், மன்னா் அதியமானின் புதல்விகள் அங்கவை, சங்கவை திருமணம் தமிழ் மூதாட்டி அவ்வையாா் முன்னிலையில் இத்திருத்தலத்தில் நடைபெற்ாக தல வரலாறு கூறுவதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments