பாலகிருஷ்ணன் - கிரிநாத்  
தற்போதைய செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கிய தாத்தா பேரன் உயிரிழப்பு

திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனா்,

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனா், மற்றொரு பேரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாலகிருஷ்ணன் (65). இவரது மகன் செல்வம் இவரது மகன்கள் கிரிநாத் (14) ஆச்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பும், விக்னேஷ் (10) திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 5 ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தாத்தா பாலகிருஷ்ணனுடன் கிரிநாத், விக்னேஷ் கடுவெளி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றுக்குள் நீரில் மூழ்கினா்.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன், விக்னேஷை மீட்டனா். இவா்களில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேஷ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். கிரிநாத் உடலை தொடா்ந்து தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தடுப்பணை பகுதியில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் உடலை மீட்டனா்.

பின்னா் திருவையாறு அரசு மருத்துவமனையில் தாத்தா பாலகிருஷ்ணன் பேரன் கிரிநாத் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக கிரிநாத் உடல் கிடைக்காதலால் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

SCROLL FOR NEXT