கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி! 2 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலியாகியதைப் பற்றி...

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பள்ளியா மாவட்டத்தின் நர்ஹி பகுதியிலுள்ள பைரியா-தம்ஹன்பூரா சாலையில் நேற்று (பிப்.15) மதியம் திடீரென அங்கு வந்த தேனீக்கள் சாலையில் சென்றவர்களை கொட்டித் தாக்கியுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த இச்சா சௌபே கா புரா கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் யாதவ் (வயது 75) என்ற முதியவரை அந்த தேனீக்கள் பலமுறை கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், படுகாயமடைந்த அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இதையும் படிக்க: தில்லி கூட்ட நெரிசல் ரயில்வேத் துறையின் தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு!

மேலும், இந்த தாக்குதலில் நக்‌ஷத்ரா யாதவ் (70) மற்றும் புரார் யாதவ் (40) ஆகிய இரு கிராமவாசிகளும் படுகாயமடைந்து தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திடீரெனத் தேனீக்கள் நடத்திய தாக்குதல் குறித்து தற்போது வரை யாரும் புகாரளிக்கவில்லை என்பதினால், அப்பகுதி காவல் அதிகாரிகள் முன்வந்து விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT