முகப்பு
தற்போதைய செய்திகள்

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்

பெரியார் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு.

Updated On : 22 ஜனவரி 2025, 10:49 am IST
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"பெரியார் சொன்னதை எடுத்துச் செல்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது. பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அங்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

Advertisement

Advertisement

பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்க்க வேண்டியதுதான், முக்கிய நபர்களே பேசாமல் இருக்கீறார்கள், நீங்கள்(திமுக) ஏன் பேசுகிறீர்கள். வீரமணியை பேச சொல்லுங்கள்.

சோவுக்கும் குருமூர்த்திக்கும் - நாம் தமிழர் கட்சிக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழர் கட்சிக்கான சான்றிதழை வாங்கி கொடுத்தார்களா? அதற்கு ஏதேனும் சான்று உள்ளதா?

அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். ‘தமிழ் சனியனை விட்டொழியுங்கள்’ என்று பெரியார் கூறினார். தமிழ் மொழியை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments