நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்!
நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம் குறித்து...
நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று(ஜூலை 14) காலமானார்.
தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.
Advertisement
Advertisement
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று பகல் 11 மணி வரையில் மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர், அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சரோஜா தேவியின் சொந்த ஊரான சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
நடிகை சரோஜா தேவியின் இறுதிச் சடங்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கொடிஹள்ளி தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழுங்க நடிகை சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்
Actress Saroja Devi's body was cremated today (July 15) with full state honors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.