முகப்பு
திருச்சி

அரசு மரியாதையுடன் எஸ்ஐ உடல் நல்லடக்கம்

திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 2:00 am IST
திருச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு புதன்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கில் குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்திய காவலா்கள்.
பகிர்:

திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், பூலாங்குடி கீழக்குறிச்சியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55), துவரங்குறிச்சியில் காவல் உதவி ஆய்வாளா். திருவெறும்பூா் பெல் பகுதியில் குடியிருந்த தட்சிணாமூா்த்தி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு பைக்கில் திரும்புகையில் பெல் தொழிற்சாலை அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

இதையடுத்து இவரது இறுதிச் சடங்கு சொந்த கிராமமான கீழக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இவரது உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் உறவினா்கள் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, இவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement