சிதம்பரம் அருகே கருப்புக் கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலுவைபுரம் கிராம மக்கள் 
தற்போதைய செய்திகள்

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிலுவைபுரம் கிராம மக்கள் தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் மக்கள் சி.மேலவன்னியூர் ஊராட்சியிலும், லால்புரம் ஊராட்சி மற்றும் வயலூர் ஊராட்சி பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியோ, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சிலுவைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிலுவைபுரம் கிராம மக்கள் மே.1 ஆம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

சிக்கிமில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

கோகோ-கோலா இந்தியா லாபம் 73% சரிவு!

மொந்தா புயல் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும்! மழை பெறுமா சென்னை?

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT